Thursday, 27 March 2025

                                                நீ எந்தன் உயிரே!

 

  “அருந்ததி என்ன இவ்வளவு, வேகமாக வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறாய் எப்போதும் வேலையை முடிக்காமல் நகரமாட்டாயே”? அது ஒன்றும் இல்லை வர்ஷினி!. “இன்றைக்கு என்னை பெண் பார்க்க வருகிறார்களாம், அம்மா சீக்கிரம் வரச்சொன்னார்கள், அதுதான்” அப்படியா  விஷயம்!, நல்லதுடி. “பர்மிஷன் போட்டுவிட்டாயா” ஆமான்டி என்று வர்ஷினிக்கு பதில் அளித்துவிட்டு வீட்டுக்கு விரைந்தாள்." 

                  

      கேசரியும், பஜ்ஜியும் அகிலா கைவண்ணத்தில் தயாராகிக்கொண்டிருந்தன. அருந்ததியைப் பார்த்ததும் சீக்கிரம் ரெடியாகணும் மா மாப்பிள்ளை வீட்டிலிருந்து இன்னும் அரைமணி நேரத்தில் வந்துவிடுவார்கள் என்று அகிலா பரபரக்க, சரிம்மா இதோ கிளம்பி விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டே தன் அறையை நோக்கி நடந்தாள் அருந்ததி. மயில் கலரில் அகல ஜரிகை வைத்த பட்டு புடவையும், போட் நெக் வைத்த ரவிக்கையும் அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டாள்

 

          அருந்ததி தயாராகியாச்சா என்ற அப்பாவின் குரல் கேட்டு அறையிலிருந்து வெளிப்பட்டாள். அக்கா நீ  எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா என்ற தங்கையின் வார்த்தை அவளை சிறிது வெட்கப்பட வைத்தது. அக்கா இந்த பூவை வைத்துக்கொள் என்று சற்றுமுன் அப்பா வாங்கி வந்த மல்லிகை சரத்தை நீட்டினாள் ஆனந்தி. மல்லிகையை அவள் கூந்தல் அணிந்து கொண்டதும் இன்னும்  அழகாக ஜொலித்தாள் அருந்ததி.

 

       கார் சத்தம் கேட்டதும் சரத்தும், அகிலாவும் வெளியில் சென்று மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றார்கள்.  நல்ல அழகும், உயரமும் கொண்ட பார்த்திவை பார்த்ததும் அகிலா தன் மகளுக்கு பொருத்தமாக இருப்பார் என்று தன்னைத் தானே பேசிக் கொண்டார். பார்த்திவின் அம்மா அப்பாவும் பார்ப்பதற்கு சாதுவாக இருந்தார்கள். அனைவருக்கும் பஜ்ஜி, கேசரி பரிமாறினாள் அருந்ததி. பார்த்திவ் அம்மாவுக்கு அருந்ததியை மிகவும் பிடித்திருந்தது அதை தெரிவிக்கும் விதமாக அருந்ததிக்கு தான் வாங்கி வந்த ஜாதி மலரை சூட்டிவிட்டார். தன் மனைவியின் செய்கையை பார்த்த ரகு எங்களுக்கு பெண்ணை பிடித்திருக்கிறது என்று வெளிப்படையாக கூற அப்பா நான் பெண்ணிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் என்று பார்த்திவ் கேட்டான். திருமணம் செய்து கொள்ள போகிறவர்கள் திருமணத்திற்கு முன்பே பேசி புரிந்து கொள்வது நல்லது என்று ரகு சொல்ல மற்ற மூவரும் ஆமோதிப்பது போல் தலையசைத்தனர் 

 

         ஒரு தனி அறையில் "பார்த்திவ் மற்றும் அருந்ததியும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொள்ள ஆயத்தமானார்கள். பார்த்திவ் தான் முதலில் பேச ஆரம்பித்தது,எனக்கு உங்களை ரொம்ப பிடித்திருக்கிறது அருந்ததி பார்க்க அழகாக இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டும் அல்ல உங்களுடைய நடத்தை என்னை கவர்ந்து விட்டது.” அருந்ததி சிரித்தபடியே என்ன சொல்கிறீர்கள் இப்போதுதான் முதல் முதலாக பார்த்துக்கொண்டோம் இந்த கொஞ்ச நேரத்திலே எப்படி உங்களுக்கு என்னைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும்? அருந்ததி தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் பெண்களுக்கே உரித்தான நளினமும், வெட்கமும் வேண்டாத விருந்தாளி ஆகிவிட்டன. ஆனால் உங்களிடம் அவற்றை பார்க்க முடிகிறது. பொறுங்கள் பொறுங்கள் அதென்ன வெட்கம் பெண்களுக்கு உரித்தானது? அப்படியில்லை அருந்ததி வெட்கப்படுவது என்பது வழக்கத்தில் இல்லாதது போல மாற்றிவிட்டார்கள் இக்கால பெண்கள் அதைச் சொன்னேன் என்று சமாளித்தான் பார்த்திவ். "ம்ம்" என்று தலையாட்டிவிட்டு உங்களுடைய பழக்க வழக்கங்களை பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா   என்று பார்த்திவிடம் அருந்ததி  கேட்டாள்.  

 

    நான் சி. வா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்  எனக்கு ஒரு தங்கை அவள் எம்.சி.  முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். அப்பா வி.. வா வேலை பார்க்கிறார். அம்மா ஹோம் மேக்கர்

 

  அப்புறம் எனக்கு குடிப்பழக்கம், புகைப்பழக்கம் என்று எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, இது என்னுடைய மெடிக்கல் சான்றிதழ் தாம்பத்ய வாழ்வுக்கு பொருத்தமானவன் என்ற முத்திரை பொதிந்தது. அருந்ததி வாங்கிப் பார்த்துவிட்டு இதைக் கூடவா காண்பிப்பார்கள் என்று சங்கடப்பட்டாள். இதில் யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை திருமணத்திற்கு முன்பே அனைத்தையும் சொல்லிவிடுவது நல்ல வருங்காலத்திற்கு இருவருக்கும் உதவி செய்யும் என்று நான் முழுதாக நம்புகிறேன் என்று பார்த்திவ் முடித்தான். இப்போது உங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா? கண்டிப்பாக என்று விட்டு அருந்ததி ஆரம்பித்தாள். நான் . பொறியாளராக வேலை செய்து கொண்டு வருகிறேன். நல்ல சம்பளம் எங்கள் குடும்பத்தை பற்றிய விவரம் திரும்பவும் அரைத்த மாவை அரைக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். மற்றபடி எனக்கு ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு உண்டு. அதனால் மனவளக்கலை கற்றுக்கொண்டேன். அது என்னுடைய படிப்பு மற்றும் நல்ல பழக்க வழக்கங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. தவிர என்னிடம் மெடிக்கல் சான்றிதழ் எல்லாம் இல்லை. மனவளக்கலை உடற்பயிற்சியும், காயகல்பமும் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்று நன்றாகத் தெரியும். ஆமாம் ஆன்மீகத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், எனக்கு அதில் பெரிதாக ஆர்வம் இல்லை அருந்ததி, படிப்பு, வேலை என்று பரபரப்பாக இருக்கும் இந்த காலத்தில் இது போன்ற பயிற்சி எல்லாம் வேண்டாத சுமை என்று நினைப்பவன் நான் என்று பார்த்திவ் கூறினான். 

 

    அவனின் இந்த பதிலை கேட்டதும் அருந்ததியின் முகம் வாடியதுஅதைக்கூட கவனிக்காமல் அதையெல்லாம் விடுங்கள் அருந்ததி என்னைப்பிடித்திருந்திறதா என்று மட்டும் சொல்லுங்கள் என்று பார்த்திவ் கேட்க, கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேண்டும்., நன்றாக யோசியுங்கள் ஆனால் நல்ல முடிவாக சொல்லுங்கள் என்றுவிட்டு இதோ என் கைப்பேசி எண் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூற தன் கைப்பேசியில் அதை பதித்துக்கொண்டாள் அருந்ததிஇருவரும் அறையிலிருந்து வெளிப்பட்டதும் பெரியவர்கள் முகத்தில் புன்னகையும், பேசி முடித்து விட்டீர்களா என்ற என்ற கேள்வியும் எழுந்ததுபார்த்திவ் உனக்கும் பெண் .கே தானே என்று ரகு கேட்க அப்பா அருந்ததி யோசிக்க டைம் கேட்கிறார்கள். எனக்கும் அது சரி என்று தோன்றுகிறது என்று முடித்தான். பார்த்திவ். சரிதான் என்றுவிட்டு ராதாவும், ரகுவும் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். பார்த்திவ் தன் கண்களால் அருந்ததியிடம் இருந்து விடைபெற்றான்.  

 

     அவர்கள் சென்றதும் என்ன அருந்ததி மாப்பிள்ளை நல்ல வாட்ட சாட்டமாக இருக்கிறார் தவிர நல்ல வேலை உனக்கு பிடித்திருக்கிறது தானே என்று சரத் கேட்க அகிலாவும், ஆனந்தியும் அவளுடைய பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அருந்ததி வழக்கம் போல் எனக்கு பிடிக்கவில்லை என்ற பதிலையே தந்தாள்.  அகிலாவுக்கு கோபம் தாங்காமல் இதெல்லாம் உனக்கு அதிகப்படியென்று தெரியவில்லை அருந்ததி  இதுவரை ஐந்து மாப்பிள்ளைக்கு மேல் வந்துவிட்டு போயாச்சு. அனைவரையும் பிடிக்கவில்லை என்றாய் அதில் ஒரு காரணம், இருந்தது. வேலை இருந்தால் அழகில்லை அழகிருந்தால் வசதியில்லை என்று. ஆனால் பார்த்திவ்க்கு என்ன குறைச்சல். அனைத்தும் இருக்கிறது. அவர்கள் அப்பா, அம்மாவுக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. இவரையும் வேண்டாம் என்கிறாயே. இது சரியா? அம்மா என்னை வற்புறுத்த வேண்டாம் என்றவளை காரணம், சொல்லம்மா என்று சரத்தும் கேட்க அப்பா காரணம் எல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் ஏதோ ஒரு குறை இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது என்றவளை ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம். அது மாதிரி பிடித்காததற்கு காரணங்கள் அடுக்குகிறாய். என்று அகிலா ஆதங்கப்பட்டார். சரி விடு அகிலா இவளுக்கு இன்னும் திருமண யோகம் வரவில்லை போலும் என்று சரத் சமாதானப்படுத்தினார். 

 

         பார்த்திவ்வின் அப்பா, அம்மாவுக்கு இப்பவே எதையும் சொல்லாதீர்கள் ஒரு இரண்டு வாரம் போகட்டும் அப்புறம் சொல்லிக்கொள்ளலாம் என்று அகிலா சொல்ல சரத்தும் ஆமோதிப்பது போல் தலையசைத்தார்..

 

         என்னடி நேற்று பெண் பார்க்க வந்தார்கள் என்றாயே. மாப்பிள்ளை எப்படி உனக்கு பிடித்திருக்கிறதா? மாப்பிள்ளைக்கு உன்னை பிடித்துவிட்டதா? என்று கேள்விகளை அடுக்க நீ பரப்பரப்பு கொள்ளும் அளவுக்கு  எதுவும் நடக்கவில்லை. என்னடி சொல்கிறாய் ஆமாம் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன் ஏன் பார்க்க நன்றாக இல்லையா. அதெல்லாம் ஒன்னுமில்லை  நல்ல அழகு, எனக்கு பிடித்த உயரம்,வேலை எல்லாத்துக்கும் மேல ஒரு கெட்ட பழக்கமும் இல்லை என்று அருந்ததி வர்ணிக்கும்போதே தன் முகம் சிவந்தாள். என்னது பிடிக்கவில்லையா பிடிக்காத ஆளைப்பற்றியா இப்படி வர்ணிக்கிறாய். இங்க பார் அருந்ததி உன்னையே நீ ஏமாற்றி கொள்ளாதே. உனக்கு பிடித்திருக்கிறது வீட்டில் சொல்லி திருமணம் செய்துகொள். இல்ல வர்ஷினி நீ என்னை கட்டாயப் படுத்தாதே என்றுவிட்டு வேலையில் மூழ்கினாள்.  இவளை என்ன செய்வது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வர்ஷினியும் வேலையில் மூழ்கினாள் இப்படியே ஒருவாரம் சென்றுக்கொண்டிருந்தது.

 

      பார்த்திவ்க்கு ஒருவாரம் ஆகியும் அருந்ததி வீட்டில் இருந்து பதில் வரவில்லை என்றதும் மிகவும் தவித்து போனான். தவிப்பை அம்மாவிடம் காட்டிக்கொள்ளாமல் என்னம்மா அருந்ததி வீட்டிலிருந்து போன் செய்தார்களா என்று சாதாரணமாக கேட்டான். இல்லையப்பா. அப்பா வரட்டும் விசாரிக்க சொல்கிறேன் என்று சொல்ல அம்மா நான் அழகுதானே, வாட்ட சாட்டமா தானே இருக்கேன் என்று கவலையாக கேட்டான். பார்த்திவ் உனக்கென்ன குறைச்சல் நீ ராஜா மாதிரி இருக்கிறாய்.  அவர்கள் வீட்டில் இன்னும் ஜாதகம் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் பார்த்துவிட்டு சொல்வார்கள் அவசரப்படக்கூடாது ப்பா என்று தன்மகனின் முடியை வருடிவிட்டார் ராதா.

 

             அந்த சமயத்தில் ராதாவின் கைப்பேசி சினுங்கியது. பார்த்திவ்தான் எடுத்தான். ஹலோ என்று அகிலா குரல் கேட்டதும் ம் சொல்லுங்கள் அத்தை எப்படி இருக்கிறீர்கள் மாமா, அருந்ததி, ஆனந்தி எல்லாம் எப்படியிருகிறார்கள் என்று விசாரித்தான். இதைக்கேட்டதும் அகிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு சையாக இருக்கிற பையன்கிட்ட அருந்ததிக்கு பிடிக்கவில்லை என்று எப்படி சொல்வது இதே யோசனையில் எல்லாம் நன்றாக இருக்கிறார்கன் தம்பி நீங்கள் எல்லாம்  எப்படி இருக்கிறீர்கள் என்று அகிலா கேட்க  எல்லோரும் நலம் அத்தை என்றுவிட்டு ஏதோ கேட்க ஆரம்பித்து பின் தயங்கியவன் இதோ அம்மாகிட்ட கொடுக்கிறேன் அத்தை என்று முடித்தான். சொல்லுங்கள் அகிலா. ஜாதகம் பார்த்தோம் பொருத்தம் சரியில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதுதான் எப்படி சொல்வது என்று தெரியாமல் தயங்கிகொண்டே இருந்தோம். இதில் என்ன தயக்கம் அகிலா. எங்கள் ஜோதிடர் பொருத்தம் அமோகமாக இருக்கு  இவர்கள் இருவரும் திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றார். நீங்கள் பார்த்தவர் பொருத்தம் இல்லையென்று சொல்லியிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அருந்ததியைஎனக்கு பிடித்திருக்கிறது.அதுவும் என் பையனுக்கு  ரொம்ப பிடித்திருக்கிறது. நீங்கள் சரியென்று சொன்னால் நாம் இப்போதே சம்பந்தம் செய்து கொள்வோம். ஜாதகம் எல்லாம் ஒரு   சம்பிரதாயத்துக்கு பார்ப்பதுதான் என்று முடித்தார் ராதா.  அகிலாவுக்கு வாயடைத்துவிட அதன்பிறகு சரத்துதான் பேசினார் இல்லைங்க நீங்கள் எங்களை மன்னிக்கனும். எங்கள் ஜோசியர் சொல்வதை நாங்கள் மீறியதில்லை. அதனால் இந்த திருமணம் நடப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை

 

          சரிங்க, யார் யாருக்கு எங்கே முடிவிட்டிருக்கிறதோ அதன்படி நடக்கட்டும் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்று சொல்லி கைப்பேசியை துண்டித்தார் ராதா. பார்த்திவ் தன் அம்மா  பேசியதை தானும் கேட்டு கொண்டு இருந்ததால் அம்மாவிடம் கேட்பதற்கு அவனுக்கு எதுவும் இல்லாமல் போனது. ராதாதான் இந்த பார் பார்த்திவ் நீ ஒன்றும் சின்னப்பிள்ளை இல்லை. உலகத்தில் இந்த பெண்ணை விட்டால் வேறு பெண் இல்லை என்று கிடையாது.  இப்போதுதான் பெண்ப்பார்க்க ஆரம்பித்து இருக்கிறோம் இதைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்று ராதா சொல்ல, அம்மா நான் அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டதை தெரியாமல் இப்படி சொல்கிறீர்களே என்று தனக்குதானே பேசிக்கொண்டான்.

 

              ஏதோ முடிவு செய்தவனாய் அடுத்தநாள் அருந்ததி அலுவலக வாசலில் நின்றான். உங்களை பார்ப்பதற்கு ஒருவர் வந்திருக்கிறார் என்று அலுவலக ஊழியர் அருந்ததியிடம் கூறினார். சரி என்றுவிட்டு சாதாரணமாக யாராக இருக்கும் என்று எண்ணியப்படியே வெளியில் வந்தாள் அருந்ததிபார்த்திவ்வை பார்த்ததும் தன் கண்களையே நம்ப மாட்டாமல் ஒரு ஆனந்த துள்ளல் உண்டாக அப்படியே முகம் பூரித்துப் போனாள்அருந்ததியின் இந்த செயலை பார்த்திவ் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அருகில் நெருங்கும்போது தன் துள்ளலையெல்லாம் தனக்குள் மறைத்தவளாய் என்ன விஷயம் பார்த்திவ் இங்கே எதற்கு வந்தீர்கள். உங்களை பார்க்கலாம் என்றுதான் வந்தேன் அருந்ததி. நீங்கள் எதற்கு என்னை பார்க்க வேண்டும். அதுதான் உங்களை பிடிக்கவில்லை என்று என் பெற்றோரிடம் சொல்லிவிட்டேனே. அவர்களும் உங்களிடம் சொல்லிவிட்டதாக சொன்னார்கள். அப்புறம் ஏன் இங்கே வந்து என்னை தொந்தரவு செய்கிறீர்கள் என்று முகத்தில் அடித்தது மாதிரி கேட்டாள்.சற்று நேரம் தயங்கியவன் பின் உங்களுக்கு என் மேல் காதல் இல்லை என்று சொல்லுங்கள்?. சற்று முன்பு அதை உங்கள் கண்களில் அந்த சதோஷத்தை பார்த்தேன் அருந்ததி. இங்கே பாருங்கள் பார்த்திவ் தெரிந்தவரை பார்த்தால் புன் முறுவல் செய்வதில்லையா அதைத்தான் நான் செய்தேன் என்று பதில் கொடுத்தாள். சரி என்னை ஏன் பிடிக்கவில்லை என்று மட்டும் சொல்லுங்கள் என்று பாவமாக கேட்டான். காரணம் எல்லாம் எதுவும் இல்லை என்றுவிட்டுப் பதில் எதிர்பார்க்காமல் அலுவலகத்தினுள் சென்றுவிட்டாள் அருந்ததி. அவளின் இந்த செயல் அவனை மிகவும் தாக்கியது. வர்ஷினி இன்று பார்த்திவ் என்னைப்பார்க்க வந்தார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அப்படியா சூப்பர்டி அப்போ காதல்ல விழுந்து விட்டேன் என்று சொல்லு. இல்லைடி 
பிடிக்கவில்லை என்து திட்டி அனுப்பிவிட்டேன் இப்படி அருந்ததி சொல்ல, அய்யோ உன்னைப்போல் குழப்பவாதியை உலகத்தில் நான் பார்த்ததில்லை. சந்தோசமாக இருந்தது என்கிறாய், இப்போ பிடிக்கவில்லை என்கிறாய் ஆனால் ஒன்று மட்டும்
தெறியுதடி நீ உன்னையே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறாய். பார்த்திவைப் பார்த்தாலும் உன்னை விடுவார் என்று தோன்றவில்லை பார்ப்போம் என்னதான் நடக்கிறது. என்று பெருமூச்சு விட்டாள் வர்ஷனி 

 

           வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் பார்த்திவின் கார் தன் வீட்டின் முன்னால் நிற்பதை பார்த்ததும் சந்தோஷமும், பதட்டமும் கலந்த உணர்வு அருந்ததிக்கு ஏற்பட்டது. உள்ளே வந்தவள் பார்த்திவை பார்த்ததும் எப்போ வந்தீர்கள், இப்போதுதான் வந்தேன். இன்றைக்கு ஒரு ட்ரைனிங் இருந்தது சீக்கிரம் முடிந்து விட்டது அதுதான் அத்தை, மாமா ஆனந்தியை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன். சொல்லிவிட்டு அருந்ததியின் முகத்தை பார்த்தான் கோபமோ அவன் சொல்லியதற்கு எந்தவித மறுப்போ சொல்லாமல் அப்படியா என்று சாதாரணமாக கேட்டாள். அவளின் இந்த செயல் அவளுக்கும் தன் மேல் விருப்பம் உள்ளது ஏதோ காரணத்தால் அதை சொல்ல மறுக்கிறாள் என்ற எண்ணம் உற்சாகத்தை தர இதோ கிளம்புகிறேன் அருந்ததி நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று நக்கலாக சொல்லிவிட்டு கிளம்பினான். அவனை அனுப்ப என்ற வாசல் வரை வந்தவள் ஏதோ உணர்ந்தவளாய் உள்ளே போக எத்தனிக்க உனக்கு பூ வாங்கி வந்தேன். அதை வைத்துக்கொள் என்றுவிட்டு சென்றான்.வீட்டிற்குள் வந்ததும் முகம், கை, கால் கழுவி தலைப்பின்னல் போட்டு அவன் வாங்கி வந்திருந்த மல்லிகை சரத்தை தலையில் வைத்த பின்னர்தான் நிம்மதியாக உணர்ந்தாள். அகிலாவுக்கு மகளின் செயலை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டார். சரத்தும் நமக்கு இவர்தான் மாப்பிள்ளை என்று எழுதி வைத்திருக்கிறது போலும் என்று நினைத்து கொண்டார். 

 

         அன்று இரவு தியானம், காயகல்பம் முடித்தவள் இரவு உணவு முடிந்ததும் படுக்கைக்கு சென்றாள் அருந்ததி உறங்க முடியாமல் பார்த்திவின் ஞாபகம் வந்து அலைக்கழித்தது. அந்த சமயத்தில் கைப்பேசி ரிங் ஆக. யோசனையில் இருந்து வெளிவந்தவளாய் ஆன் செய்து ஹலோ என்றாள். பார்த்திவ் சாப்டாச்சா அருந்ததி ம்ம் ஆச்சு. நீங்கள் நாங்களும் முடிச்சாச்சு. நீங்கள் இன்னும் தூங்கலையா பார்த்திவ் தூக்கம் வரவில்லை அருந்ததி உன் நினைப்பாகவே உள்ளது. என்று நீ என்னை சேருகிறாயோ அன்றுதான் நல்ல உறக்கம் வரும் என்று பார்த்திவ் சொல்ல கவனிக்காதவள் போன்று எதற்கு போன் செய்தீர்கள் என்று கேட்டாள். அருந்ததி நீ என் மனைவி ஆக போகிறவள் உன்னிடம் பேச எனக்கு ஆயிரம் இருக்கும். அப்படியா எங்கே ஒன்னு ஒன்னா சொல்லுங்கள் பாப்போம் என்று கேட்க, பார்த்திவ் உள்ளம் பூரித்தவனாய் தன்னை ஏற்று கொண்டுவிட்டாள் என்ற சந்தோஷத்தில் சொல்ல தொடங்க எத்தனை தடவை உங்களிடம் சொல்வது எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்று ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள் என்ற அருந்ததின் குரல் அவனின் மனதை ரணமாகியது. இருந்தாலும் தன் காதலை மறக்க முடியாமல் இதோ பார் அருந்ததி இந்த ஜென்மத்தில் நீதான் என் மனைவி என்று முடிவு செய்துவிட்டேன் உனக்கும் அப்படிதான் என்று எனக்கு நன்றாகவே தெரியும். உன் நல்ல முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் இவன்தான் பேசிக்கொண்டிருந்தானே தவிர மறுமுனை போன் துண்டிக்கப்பட்டிருந்தது. அருந்ததி என்னை ஏன் சித்திரவதை செய்கிறாய் என்று எண்ணியப்படியே உறங்கிப்போனேன்.

 

             அன்றைக்கு பிறகு அருந்ததிக்கு பார்த்திவிடம் இருந்து போனும் வரவில்லை அவளை நேரிலும் அவன் சந்திக்கவில்லை. எங்காவது அவனை பார்க்க முடியுமா என்று அருந்ததியின் கண்கள் தேடின. ஆனால் கிடைத்தது ஏமாற்றமே. ஒவ்வொரு நாளும் அவனுடைய கார் தன் வீட்டின் முன் நிற்கிறதா என்று எதிர்பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள்.ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. பழைய உற்சாகம் அவளிடம் காணவில்லையே என்று அகிலா கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை அம்மா என்று சமாளித்தாள்.

 

             அன்று அலுவலகத்தில் வேலை செய்துகொண்டே வர்ஷினி நீ என்னமோ சொன்ன பார்த்திவ் என்னை விடற மாதிரி தெரியவில்லை என்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டன ஆளையே காணோம் என்று எதார்த்தமாக கேட்பது போல் அருந்ததி கேட்டாள். ஏனடி பார்த்திவை பார்க்காமல் உன்னால் இருக்க முடியவில்லையா என்று வர்ஷினி நக்கலடித்தாள். ஆமாம் அவரின் பிரிவு என்னால் தாங்க முடியவில்லை வர்ஷினி கடைசியாக அவர் போன் செய்தபோது என்று நடந்ததை கூறினாள். அதன் பிறகு அவரிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை என்று வருத்தப்பட்டாள். பேசிக்கொண்டிருக்கும்போதே அருந்ததி கைப்பேசிக்கு பார்த்திவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதில் அவன் அவளை பார்க்க விரும்புவதாக சொல்லி குறிப்பிட்ட ஹோட்டலுக்கு வருமாறு கூறியிருந்தான். தன கண்களையே நம்ப முடியாமல் மீண்டும் ஒருமுறை படித்தாள். உற்சாகத்தில் இன்னும் அழகாக ஜொலித்தாள். என்ன அருந்ததி பதவி உயர்வு கிடைத்துவிட்டதா?ஆயிரம் வாட்ஸ் பல்ப் உன் முகத்தில் எரிகிறது என்று போனை பிடுங்கி பார்த்திவின் குறுஞ்செய்தியை பார்த்தாள் வர்ஷினி. பார்த்துவிட்டு நான் தான் சொன்னேனே அண்ணாத்த உன்னை விடமாட்டார் என்று. இங்க பார் அருந்ததி உனக்கும் பிடித்து இருக்கிறது.வீட்டில் சொல்லி திருமணம் செய்துகொள். என்று மீண்டும் அறிவுரை வழங்கினாள் வர்ஷினி.  இவள் பேசுவதை ஏதும் காதில் வாங்காமல் நான் வீட்டுக்கு கிளம்புறேன் டி. எனக்கு ஒரு அரை நாள் விடுப்பு சொல்லிவிடு என்று கைப்பையை எடுத்து கொண்டு கிளம்பினாள் அருந்ததி. இவள் போகும் வேகத்தை பார்த்தாள் இன்றே திருமணம் முடிந்து விடும் போல என்று தனக்குத் தானே பேசி சிரித்து கொண்டாள் வர்ஷினி.   

 

             வீட்டுக்கு சென்று தன்னை அழகுப்படுத்திகொண்டு  அவனுக்கு முன்பாக ஹோட்டலுக்கு சென்று காத்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு ஒரு ஆரஞ்சு ஜுஸ், அவளுக்கு ஒரு தர்பூசணி ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு காத்துக்கொண்டிருந்தாள்.  அவன் ஹோட்டலுக்கு வருவதற்கும் ஜுஸ் வருவதற்க்கும் சரியாக இருந்தது.  பார்த்திவ்வுக்கு அருந்ததியைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்கவில்லை. அருந்ததி அனைத்தையும் மறைத்தவளாய், வாங்க உட்காருங்கள். எப்படி இருக்கீங்க, வேலை எல்லாம் நல்லா போகுதா என்று கேட்டாள் ம் நான் நன்றாக இருக்கிறேன் வேலையெல்லாம் வழக்கம்போல் நன்றாக போகிறது. நீ எப்படியிருக்க என் தொந்தரவு இல்லாமல் நீ நன்றாக இருந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும் என்றான். என்னத் தெரியும் உங்களுக்கு என்று வேகமாக பேச ஆரம்பிந்தாள். ப்ளீஸ் அருந்ததி உனக்கு என்னை திட்ட வேண்டும் அப்படித்தானே. முதல்ல ஜூஸ் குடிப்போம் அப்புறம் அடுத்த தெருவில் ஒரு பார்க் இருக்கு அங்க போவோம், அங்கவைத்து நீ எவ்வளவு வேண்டுமென்றாலும் திட்டு நான் வாங்கிக்கொள்கிறேன் என்றதும் வாயை மூடிக்கொண்டாள். இருவரும் ஜூஸ் குடித்ததும் பார்க்கில் சென்று அமர்ந்தார்கள். பார்த்திவ் தான் வாங்கிவந்த பூவை அவள் பக்கம் நகர்த்தி வைத்துக்கொள் என்று செய்கை செய்தான். அவள் தலையில் பூவை வைத்துக்கொண்ட பிறகு, இப்போ என்னை என்ன  திட்ட வேண்டும் திட்டிக்கொள் அதை நான் வாங்கி கொள்கிறேன்

 

       எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். கண்கள் குளமாகி அழ தயாராக இருந்தாள்.  ஹேய் அருந்ததி என்னாயிற்று ஏன் கண் கலங்கி இருக்கிறது. உனக்கு என்னை பிடிக்கவில்லை அவ்வளவுதானே. நானும் அதற்காகத்தான் அது விஷயமாக பேசத்தான் வந்தேன். அருந்ததி இதுவரை நான் உன்னை தொந்தரவு செய்ததற்காக என்னை மன்னித்துவிடு நானும் பல கோணங்களில் யோசித்து பார்த்துவிட்டேன். என்னிடம் எந்தக்குறை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நீ என்னை பார்த்த விதம், உன்கிட்ட நான் பார்த்த முக மலர்ச்சி இதையெல்லாம் வைத்து உனக்கும் என் மேல் காதல் வந்துவிட்டது என்று நினைத்தேன். ஒதுங்கி விடலாம் என்று சில சமயம் தோன்றும் , ஆனால் என்னால் உன்னை மறந்து வாழ முடியும் என்று தோன்றவில்லை. அதனால் உன்னை சுற்றி சுற்றி வந்தால் உனக்கும் என் மேல் நல்ல அபிப்ராயம் வரும் என்று நினைத்தேன் இந்த ஒரு மாத பிரிவு கூட உன்னை பாதித்திருக்கும் என்று நினைத்தேன், ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதற்கு மேல் ஒரு பெண்ணை துன்பப்படுத்த விரும்பவில்லை. இன்று தான் நான் உன்னை தொந்தரவு செய்யும் கடைசி நாள் என்று கோர்வையாக பேசி முடித்தான்.

 

    தன் பர்சில் இருந்து சில போட்டோக்களை எடுத்து இந்தா அருந்ததி இவையெல்லாம் உன்னுடைய  போட்டோக்கள் தான். அத்தையிடம் இருந்து பார்த்து விட்டு தருவதாக வாங்கினேன், மனைவியாக வரப்போகிறவள் தானே என்று நினைத்து வைத்துக் கொண்டேன். ஆனால் அதுதான் இல்லையென்று ஆகிவிட்டனவே வேறொரு பெண்ணின் படத்தை வைத்திருப்பது நாகரீகம் என்று தோன்றவில்லை, அதனால்  உன்னிடம்  கொடுத்து விடுகிறேன் என்று அவளுடைய தலையை உயர்த்தி கையில் கொடுத்தான் கண்ணீரையும் துடைத்து விட்டான். போட்டோக்களுடன் வேறொரு காகிதமும் சேர்ந்து இருந்ததை இருவருமே கவனிக்கவில்லை. நீ அழுதது எனக்கு பிடிக்கவில்லை அருந்ததி எப்போதும் என்னை திட்டுவாயே அது மாதிரி திட்டி இருக்கலாம் என்று சிரித்தான். சரி அருந்ததி அவ்வளவுதான் கிளம்புவோமா எப்போதாவது காலம் நம்மை சந்திக்க வைத்தால் சந்தித்துக் கொள்ளலாம் என்று விட்டு காரை எடுக்க போனான். இப்பவே போக வேண்டுமா. ஆமாம் அருந்ததி ஒரு மாதம் விடுப்பில் இருந்தேன் இன்று தான் ஆபிஸ் சென்று முக்கியமான அக்கவுண்ஸ். கோப்புகளை எடுத்து வந்தேன். அதையெல்லாம் கொஞ்சம் பார்க்க வேண்டும் வரட்டா என்றான். ஒரு மாதம் விடுப்பு போட்டு இருந்திருக்கிறீர்கள் ஆனால், என்னைப் பார்க்க வரமுடியவில்லை ஏன். என்று சிரித்த முகத்துடன் கேட்டாள். அதைப் பார்த்தவுடன் அவனின் காதல் தலைதூக்க ஆரம்பிக்க இவள் தெரிந்தவர்களிடம் இப்படித்தான் பேசுவாள் இதை காதல் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது என்று தானே சொல்லிக்கொண்டு, இல்லை அருந்ததி நான் ஊரில் இல்லை ஆழியாருக்கு சென்றுவிட்டேன் இருபத்தி ஒரு நாள் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அங்க பிரம்மஞானம் வரை பயின்றுக்கொண்டேன் நேற்றுதான் வந்தேன் வந்தவுடன் உன்னைப்பார்க்க தோன்றியது.

 

           அதனால் உன்னை இங்கே வரசொன்னேன் ஒரு நிமிடம் அந்த ஒயிட் கார்டு என்று தன் பர்சில் இருந்து எடுக்க பார்த்தான்.  கார்டு காணவில்லை என்றதும் உன் போட்டோக்க--ளோடு இருக்கிறதா என்று பார். ஆமாம் என்று எடுத்து பார்த்தாள் அவன் கற்றுக்கொண்ட யோக பயிற்சி விவரங்கள் டிக் செய்யபட்டிருந்தது. இதைப் பார்த்ததும் புன் முறுவலோடு ஏன் இதைக்கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இது என்ன கேள்வி அருந்ததி நம் முதல் சந்திப்பில் இதைப்பற்றி நீ சொன்னாய் அல்லவா. நானும் கற்றுக்கொள்ள எண்ணிணேன். நீ என்னில் பாதி என்று நினைத்தேன். உனக்கு தெரிந்தது எனக்கும் தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டேன் . கூடவே என்னை பிடிக்காததற்கு மனவளக்கலை கற்காதவன் என்பதால் கூட இருக்குமோ என்று நினைத்து படித்தேன். ஆனால் இப்போதல்லவா தெரிகிறது உனக்கு என்னையே பிடிக்கவில்லை என்று.

 

         ச ரி அருந்ததி நேரம், ஆகிக்கொண் டு இருக்கிறது கிளம்புகிறேன் என்றவனை.பின்னாலிருந்து கட்டி பிடித்தாள் அருந்ததி. ஹேய் விடு அருந்ததி என்ன செய்கிறாய். விடமாட்டேன் என்றுவிட்டு அவனின் முன்பக்கமாக வந்து மீண்டும் இறுக்கமாக கட்டிப்பிடித்தாள். பிடிக்கவில்லை என்றுவிட்டு என்னை இப்படி திக்கு முக்காட வைக்கிறாயே. நான் இப்போ என்ன செய்ய வேண்டும். ஒன்றும் செய்ய வேண்டாம் நீங்களும் என்னை இறுக்கி கொள்ளுங்கள் என்றாள். அருந்ததி எனக்கு ஒரு தெளிவு வேண்டும், உனக்கு என்னை பிடித்திருக்கிறதா? பிடிக்காமல் தான் இப்படி கட்டிக்கொண்டு நிற்கிறேனா. அவளை விலக்கிவிட்டு என்னை பார்த்து சொல்லு நிஜமாகவே பிடித்து இருக்கிறதா. ஆமாம் என்றாள்.இந்த மாற்றத்திற்கு என்ன காரணம், காதல் தான் என்று சற்றும் யோசிக்காமல் சொல்லிவிட்டு இந்த ஒருமாதம் உங்களை. பார்க்காமல் நான் பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லை என்று உருகினாள்.  இதைத்தானே நானும் உன்னிடம் சொன்னேன். அப்போதெல்லாம் பிடிக்கவில்லை என்று உதறித்தள்ளினாய். இப்போது எப்படி?    பார்த்திவ் என்று உங்களை முதலில் பார்த்தேனோ அன்றே உங்களை எனக்கும் பிடித்துவிட்டது. என்னையே நினைத்து கொண்டிருக்கும் உங்களை எனக்கு எப்படி பிடிக்காமல் போகும்.ஆனால் ஆன்மீகம் உங்களுக்கு பிடிக்காது என்றீர்கள். நான் மனவளக்கலை பயின்ற வரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் கணவன், மனைவி இருவரும் மனவளக்கலை கற்றிருந்தால் குடும்ப அமைதி உண்டாகும். நல்ல குழந்தை செல்வத்தை உலகுக்கு கொடுக்க முடியும். தம்பதிகள் இடையே நல்ல புரிதல் இருக்கும் மற்றும் நாம் கற்றுக் கொண்டதை சமுதாயத்திற்கு கொண்டு சேர்ப்பதில் எந்த தடையும் இருக்காது என்பது நான் தெரிந்து கொண்ட உண்மை.  அதை என்னிடம் சொல்லியிருக்கலாமே நான் நீ இருக்கிறாய் என்ற சந்தோஷத்தில் ஆழியாறு சென்றிருப்பேனே. அதைவிடுத்து உனக்கு பிடிக்கவில்லை என்று உன்னையும் கஷ்டப்படுத்தி கொண்டு என்னையும் இப்படி தவிக்கவிட்டு என்ன அருந்ததி என்று வருத்தப்பட்டான்.  இல்லை பார்த்திவ் உங்களை வற்புறுத்த எனக்கு விருப்பமில்லை.ஆனால் உங்களை விட்டு வாழவும் என்னால் முடியாது என்று தெரிந்த பின்னர்தான் உங்களிடம் என் காதலை சொல்லலாம்  என்றிருந்தேன். ஆனால் உங்களை பார்க்கவே முடியவில்லை. இன்று பார்க்கலாம் என்று குறுஞ்செய்தி நீங்கள் அனுப்பியவுடன் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று ஆவலுடன் வந்தேன். பார்த்தால் நீங்களே மனவளக்கலை கற்றுக் கொண்டு விட்டீர்கள். இதற்கு பிறகு நான் உங்களை சேர என்ன தடை என்று அருந்ததி சொல்லி முடித்தாள். சரி பிறகு எதற்கு சற்றுமுன் அழுதாய் என்றான் பார்த்திவ். நான் ஒரு மாதமாக தவித்தது எனக்கு தானே தெரியும். ஆசையில் வந்தால் நீங்கள் என் தொந்தரவு இல்லாமல் நன்றாக இருந்திருப்பாய் என்றீர்கள் அதுதான் அழுகை வந்துவிட்டது. அருந்ததி அடம்பிடிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பார்கள் அதுபோல என்னிடம் நீங்கள் யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தால் போதும் நான் அதை செய்திருப்பேன். நீயே கதி நீதான் என் மனைவி என்று எத்தனை தடவை சொல்லியிருப்பேன். அப்போ உனக்கு என் மேல் உரிமை உண்டு என்றுதானே அர்த்தம். அன்னியர்களை தான் எதையும் செய்வதற்கு வற்புறுத்தக்கூடாது. நான் தான் உன்னில் பாதியாயிற்றே என்று அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.  

 


Thursday, 5 May 2022

                             








"வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

  ஈண்டு முயலப் படும்"

 

 விளக்கம் : விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.


                                                  நீ எந்தன் உயிரே!     “அருந்ததி என்ன இவ்வளவு , வேகமாக வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்கிற...